Sunday, 12th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரி கரை மீதுள்ள அருள்மிகு அசலதீபேஸ்வரர் ஆலயத்தில் ஆவணிமாதம் சோமவார பிரதோஷச விழாவை முன்னிட்டு மூலவர் அசலதீபேஸ்வரர் மற்றும் நந்திபகவானுக்கு பலவகையான வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும், பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு தீப உபசரிப்புகளுடன், மகாதீபராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர் எம்பெருமான் ரிஷப வாகனத்தில் திருக்கோவிலை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு திருக்காட்சி தந்தார் இதில் ஏராளாமான பகதர்கள் தரிசனம் பெற்று சென்றனர்.
சோமவார பிரதோஷச விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.